மேலும்

டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

ஈபிடிபியின் செயலாளர் நாயகமும்,முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி கோரி பேரணி

படுகொலை செய்யப்பட்ட,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு நீதி கோரும் பேரணி என்பன மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றுள்ளன.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்  சட்டவரைவை சவாலுக்குட்படுத்துவேன்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்  சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப் போவதாக  முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜேவிபி தலைமையகத்தில் சீனாவின் உயர்மட்டக் குழு- டில்வினுடன் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் நேற்று ஜே.வி.பி  பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட ஜேவிபி தலைவர்களைச் சந்தித்துள்ளனர்.

13 ஆயிரம் கொள்கலன்கள் தேக்கம்- கொழும்பு துறைமுகத்தில் நெருக்கடி

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 13 ஆயிரம் கொள்கலன்களை அகற்றுவதற்கு உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்ட போதும், பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.

கடும் பாதுகாப்புடன் காலி கோட்டையை ஆய்வு செய்த சீனக் குழுவினர்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின்  கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் (Wang Junzheng)   காலி கோட்டையில் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

“நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நிற்போம்“- அனுரவுக்கு மோடி கடிதம்

பேரிடரைத் தொடர்ந்து சிறிலங்காவின் நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை ஆதரிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பண்டிகைக்கால பாதுகாப்பு- சிறப்பு நடவடிக்கை பணியகம் உருவாக்கம்

பண்டிகைக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், நகரங்கள், வழிபாட்டு இடங்கள், விடுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எல்லா நேரங்களிலும் சீனா உதவும்- அனுரவுக்கு வாக்குறுதி

எல்லா நேரங்களிலும்  சிறிலங்காவுக்குத் தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் என சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய குழு உறுப்பினரும், ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருமான வாங் ஜூவான்செங் தெரிவித்துள்ளார்.

தொடர் சந்திப்புக்களை அடுத்து புதுடெல்லிக்கு புறப்பட்டார் ஜெய்சங்கர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொடர் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு  புறப்பட்டுச் சென்றுள்ளார்.